அண்மைய செய்திகள்

recent
-

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெறுவதால் ஆபத்தில்லை : உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதி கரிக்க கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார். அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் பெண்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசி களிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை என்பதனால் அவை தாய்ப்பால் மூலம் பரவுவதற்கான ஆபத்தும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். உண்மையில், தாய்மார்களின் நோய் எதிர்ப்புச் சக்தியே தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெறுவதால் ஆபத்தில்லை : உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் Reviewed by Author on August 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.