அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்திற்கு புதிதாக 6 தகன மயானங்களுக்கு அனுமதி

வடக்கு மாகாணத்தில் புதிதாக 6 தகன மயானங்களை ஸ்தாபிப்பதற்கு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் மாத்திரமே, இரண்டு தகன மயானங்கள் தற்போது காணப்படுகின்றன. 

 இந்த நிலையில், புதிதாக வட மாகாணத்தில் மேலும் சில தகன மயானங்களை ஸ்தாபிக்க அனுமதி வழங்குமாறு, உள்ளுராட்சி சபைகள், கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, புதிதாக 6 தகன மயானங்களை அமைக்க நேற்று முன்தினம் (09) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வட மாகாணத்தில் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், தற்போதுள்ள தகன மயானங்களின் எண்ணிக்கை போதுமானதாக காணப்படவில்லை. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய தகன மயானங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

(TrueCeylon)

வட மாகாணத்திற்கு புதிதாக 6 தகன மயானங்களுக்கு அனுமதி Reviewed by Author on September 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.