இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த யுவதி கைது
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்ட விரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.
கஸ்தூரியிடம் மெரைன் போலீசார் முதல் கட்ட விசாரணை செய்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்கின்றனர்.
எனவே பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளி நாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில் அழைத்துச் சென்ற முகவரை தேடி வருகின்றனர்.
கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த யுவதி கைது
Reviewed by Author
on
September 06, 2021
Rating:
No comments:
Post a Comment