அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர் களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாண கல்வி,சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன என்று மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பின் பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றனமை மகிழ்ச்சியளிக்கிறது. 

சுகா தார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டு கின்றேன். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களது அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “வடக்கு மாகாணத்தில்நாளை (இன்று) ஆரம்பிக்கப்படும் 639 பாடசாலைகளும் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இன்று முன்னெடுக்கத் தயார் நிலையில் உள்ளதுடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்குரிய கைகளைத் சுத்தப்படுத்தும் திரவம் உள்ளிட்டவையும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று வட மாகாண கல்விப் பணப்பாளர் செல்லத்துரை உதயகுமார் தெரிவித்தார்.

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் Reviewed by Author on October 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.