இந்திய மீனவர்களை கைது செய்ய முயற்சியில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள், இலங்கை காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது.
இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கினர். அவர்களில் சுகந்திரன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் படகு ஓட்டி ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை கைது செய்ய முயற்சியில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
Reviewed by Author
on
October 19, 2021
Rating:
No comments:
Post a Comment