அண்மைய செய்திகள்

recent
-

இங்கிலாந்து தேசிய பட்மின்டன் போட்டியில் சாதித்து வரும் இளம் தமிழ் சிறுவர்கள்

இங்கிலாந்து நாட்டின் போட்டிகளில் பிரகாசித்து வரும் லாவண்யா கிருஷாந்தன் மற்றும் சஜன் செந்தூரன் ஆகியோரே இந்த வாழ்த்துக்களுக்கு உரியவர்கள் 13 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து தேசிய பேட்மிண்டன் போட்டியில் 

 i)லாவண்யா கிருஷாந்தன் 
ஒற்றையர் பெண்கள் பிரிவில் -வெண்கலப் பதக்கத்தையும் 
இரட்டையர் பெண்கள் பிரிவில் - வெள்ளிப் பதக்கத்தையும் 
கலப்பு இரட்டையர் பிரிவில்- வெண்கலப் பதக்கத்தையும் பெற்று தான் பங்குகொண்ட மூன்று பிரிவிலும் வெற்றிவாகை சூடியிருக்கின்றார்.

அதேபோல்,

சஜன் செந்தூரன் பங்குகொண்ட 
ஒற்றையர் ஆண்கள் பிரிவில் - வெண்கலப் பதக்கத்தையும் 
இரட்டையர் ஆண்கள் பிரிவில் - வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றிப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டிருக்கின்றார். 

 மில்ற்ரன் கீன்ஸ் நகரிலுள்ள இங்கிலாந்து பேட்மிண்டன் நேஷனல் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியை இங்கிலாந்து பட்மிண்டன் அமைப்பு தொடர்ந்து இரண்டு நாட்களாக நடத்தியிருந்தது. இது நமது இளம் திறமையாளர்களின் மாபெரும் சாதனையாகும். அவர்களின் அற்புதமான முயற்சி மற்றும் சாதனை குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்கின்றோம். 

 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குச் செல்வதற்காக அவர்கள் போட்டிகள் நடந்த இரண்டு நாட்களிலும் அயராது விளையாடியிருந்தனர்! இத்தருணத்தில் அவர்கள் இருவரும் இங்கிலாந்து பட்மின்ரன் அமைப்பின் அதிகாரிகள் பலரினதும் பார்வையாளர்களும் பெரும்பாராட்டுக்களை பெற்றிருந்ததுடன் ஏராளமான ஆதரவாளர்களையும் தம்வசமாக்கிக்கொண்டுவிட்டனர் . அவர்களை உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF பெருமகிழ்வுடன் பாராட்டி நிற்பதுடன் எதிர்கால போட்டிகளில் மேலும் வெற்றிகளை பெற வேண்டுமெனவும் வாழ்த்தி நிற்கின்றது


இங்கிலாந்து தேசிய பட்மின்டன் போட்டியில் சாதித்து வரும் இளம் தமிழ் சிறுவர்கள் Reviewed by Author on December 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.