அண்மைய செய்திகள்

recent
-

யாழில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், நேற்றைய தினம் கிணற்றில் தவறி விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழ்ந்தான். விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். 


வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து சென்ற சிறுவன் கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு Reviewed by Author on January 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.