இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
திருமணமாகி இரண்டு வயது வந்த பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
22 அகவை ஆணும் 16 அகவை பெண்பிள்ளைகளும் உள்ள நிலையில் முதற்கணவர் தட்டையர்மலை முத்துஜயன்கட்டில் வசித்துவந்துள்ளார். தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத நிலையில் பற்றையால் சூழப்பட்ட காணி ஒன்றில் ஒரு சிறிய குடிலிலேயே இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து உடலம் கிணற்றினுள் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க விரைந்த பொலிசார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்தியர் பி.நிலுசன்,தடயவியல் பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 அகவையுடை கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்
இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment