அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்!

நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (15) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,211 ஆக பதிவாகியுள்ளது. 

 நேற்று முன்தினம் நாட்டில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் இது இரட்டிப்பாகி உள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 595,657 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்! Reviewed by Author on January 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.