அண்மைய செய்திகள்

recent
-

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பரவிவரும் கொரோனா ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சுமார் 500 பேர் வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்தப்படவுள்ளது. 

இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Reviewed by Author on January 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.