அம்பியூலன்ஸ் சாரதியை துப்பாக்கியால் சுட முயன்ற நால்வரைத் தேடி விசாரணை
அம்பியூலன்ஸ் பாணந்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இறங்கி சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும், அந்த முயற்சி பயனளிக்காமையினால் சந்தேகநபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்து தோட்டாவொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் பாணந்துறை தெற்கு பொலிஸாரும் மேலும் சில குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அம்பியூலன்ஸ் சாரதியை துப்பாக்கியால் சுட முயன்ற நால்வரைத் தேடி விசாரணை
Reviewed by Author
on
January 28, 2022
Rating:
No comments:
Post a Comment