அண்மைய செய்திகள்

recent
-

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது-சுகாதார அமைச்சருக்கு செல்வம் எம்.பி கடிதம்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ் விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு இன்றைய(14)தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, 21.12.2021 அன்று ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக குழு மற்றும் பொதுச் சபையின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் மருத்துவ தொழிலைப் பாதிக்கும், தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கையானது நியாயமானதும் உண்மையானதுமாகும். 

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன் வைத்துள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் வன்னி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற பிரச்சனையுமாகும். எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதி நிதிகளுடன் கலந்துரையாடி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பது உகந்தது.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது-சுகாதார அமைச்சருக்கு செல்வம் எம்.பி கடிதம். Reviewed by Author on January 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.