ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை பாரிய புதைகுழியில் புதைக்கும் மரியுபோல் நகர தொழிலாளர்கள் -
சில படங்களில் உடல்கள் பொடிபாக்குகளிற்குள் வைக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது-சில உடல்கள் போர்வைகளால் போர்த்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அந்த நகரம் தொடர்ந்தும் ரஷ்யாவின் தாக்குதலிற்குள்ளாகிவருகின்றது - உக்ரைனின் ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அந்த நகரம் காணப்படுகின்றது.
ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான பின்னர் நகரில் 1300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கான குடிநீர் மின்சார விநியோகம்துண்டிக்கப்பட்டுள்ளது-ரஸ்யா 300,000 மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதன்மூலம் யுத்த குற்றத்தில் ஈடுபடுகின்றது என உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம் என்பதை எங்களால் கணக்கெடுக்க முடியாமலுள்ளது,உண்மையான உயிரிழப்பு மூன்று நான்கு மடங்கு அதிகம்,வீதிகளில் எத்தனை பேர் விமானக்குண்டுவீச்சினால் எறிகணை தாக்குதலால்உயிரிழந்தார்கள்என்பதை எங்களால் கணக்கெடுக்கமுடியவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
எத்தனை பேர்கொல்லப்பட்டார்கள் என்பது தெரியாது அனைத்து உடல்களையும் சேகரிக்க முடியாது, எங்களால் கணக்கெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு உடல்களை புதைப்பதற்காக நகர பணியாளர்கள் 75 அடி நீள புதைகுழியை வெட்டுகின்றனர்-உடல்களை புதைக்கின்றனர்.
இந்த காட்சிகளை பதிவு செய்த ஏபியின் பத்திரிகையாளர் எவ்ஜெலினி மலோலெட்கா உடல்கள் கார்ப்பெட்களால் போர்த்தப்பட்டு அல்லதுபிளாஸ்டிக் பாக்குகளில் கொண்டுவரப்படுகின்றன செவ்வாய்கிழமை நான்பது உடல்கள் வந்தன புதன்கிழமை 30 உடல்கள் வந்தன என தெரிவித்துள்ளார்
ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை பாரிய புதைகுழியில் புதைக்கும் மரியுபோல் நகர தொழிலாளர்கள் -
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment