அண்மைய செய்திகள்

recent
-

நிதியமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் - அலி சப்ரி

நிதியமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நிதியமைச்சை தன்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் பொருத்தமான ஒருவர் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கையில் தான் இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், எந்தவொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் இலாகாவை ஏற்றுக்கொள்ள முன்வராததால், மிகவும் பொருத்தமான நபர் நியமிக்கப்படும் வரை நாட்டின் நலனுக்காக நிதி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன் என அவர் தெரிவித்தார். 

தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம், நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே எனவும் அவர் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரிக்கின்றன. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும், நாட்டின் நலனுக்காக தன்னால் இயன்றதைச் செய்யப் பாடுபடுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் - அலி சப்ரி Reviewed by Author on April 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.