நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து நாளை
இலங்கை எதிர்கொண்டுள் பொருளாதா நெருக்கடி குறித்து பிரதமர் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். மருந்து உணவு உரங்கள் போன்றவற்றினை பெற்றுக்கொள்வதில் உதவுவது குறித்து இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிகளை சந்தித்துள்ளதுடன் சர்வதேச கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தன என தெரிவித்துள்ள பிரதமர் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்ளும் சவாலை அரசாங்கம் எதிர்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் காணப்படும் டொலர் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் ஏனைய வழிமுறைகள் குறித்து ஆராய்கின்றது
இதேவேளை பிரதமர் நாளை நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலை குறித்து விசேடஅறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து நாளை
Reviewed by Author
on
May 15, 2022
Rating:
No comments:
Post a Comment