பெரு விருட்சமாய் நிமிர்ந்து நின்ற அறியாமை இருளகற்றும் புத்தொளி கீற்றை காரிருள் மூழ்கடித்து 41 வருடங்கள்…
புராதனம் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்…
1800களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ்.நூலகம்.
இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ்.நூலகத்தை பற்றின.
1981ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.
நூலகம் எரியூட்டப்பட்ட வேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன
பெரு விருட்சமாய் நிமிர்ந்து நின்ற அறியாமை இருளகற்றும் புத்தொளி கீற்றை காரிருள் மூழ்கடித்து 41 வருடங்கள்…
Reviewed by Author
on
June 01, 2022
Rating:
No comments:
Post a Comment