அருகிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றுங்கள்: ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு வேண்டுகோள்
ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவைக்கு அமர்த்தும் போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவைக்கு அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையொன்றில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பார்களாயின் அவர்களை தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலையில் கடமைக்கு அமர்த்த முடியும். மாணவர்களுக்கு தடையின்றி கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றுங்கள்: ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு வேண்டுகோள்
Reviewed by Author
on
June 17, 2022
Rating:
No comments:
Post a Comment