அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட நிலையில் கைதான 23 இலங்கையர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.50 அளவில் நாட்டை வந்தடைந்தனர். 

நீர்கொழும்பு, கொஸ்வாடிய மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே நாட்டை வந்தடைந்தனர். அவர்கள் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வென்னப்புவ – கொஜ்வாடிய பகுதியில் இருந்து பலநாள் படகில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டனர். இந்தநிலையில், அவர்களை அவுஸ்திரேலிய கடலோர காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் Reviewed by Author on June 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.