மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு நடுக்கடலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கடலில் மூழ்கியது
மீனவர்கள் மணலை தீவு அருகே உள்ள புள்ளி வாசல் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக படகின் அடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விசைப்படகு நடுக் கடலில் மூழ்கியது.
அப்போது கடலில் தத்தளித்த ரவி, அருள், சுப்பு, கண்ணன் ஆகிய 4 மீனவர்களையும் அப்பகுதி மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு மண்டபம் அழைத்து வந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலில் மூழ்கிய படகில் சிக்கி ஷாஜகான் என்ற மீனவர் ஒருவர் மாயமானார்.
கடலில் மாயமான மீனவரை காலை முதல் சக மீனவர்கள் மரைன் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாயமான மீனவர் கிடைக்காததால் உச்சபுளி ஐ.என்.எஸ் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், இந்திய கடலோர காவல் படைக்கு ஹோவர்கிராப்ட் உள்ளிட்டவைகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மரைன் போலீசார்; மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் அழைத்துக்கொண்டு சம்பவம் இடத்தில் மாயமான மீனவரை பல மணி நேரம் தேடி வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு நடுக்கடலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கடலில் மூழ்கியது
Reviewed by Author
on
July 17, 2022
Rating:
No comments:
Post a Comment