அண்மைய செய்திகள்

recent
-

கனடாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தெற்கு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 11 இலங்கையர்களை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், க்யூ பிராஞ்ச் (சிஐடி பிரிவு) அவர்களின் தொலைபேசி சமிக்ஞைகளைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்து. குறித்த நபர்களின் நண்பர்களை எச்சரித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

தேடுதலுக்குப் பின்னர் , தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன இருவர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்பது பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்து தென் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கேரள பொலிஸாரிடம் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​அவர்கள் தலா 2.5 இலட்சம் ரூபாவை கொழும்பில் உள்ள லக்மனா என்ற முகவரமைப்பிடம் கொடுத்து, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாக பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளனர்.

கனடாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது Reviewed by Author on September 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.