அண்மைய செய்திகள்

recent
-

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து பலி

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது.

 இறுதிக்கிரியைகள் கலந்துகொள்ள வைத்திருந்த மருமகன் மீது வீட்டு வளாகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார். அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் விழுந்து பலி Reviewed by Author on October 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.