மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம்!
இதன்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக் கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சத்துணவு பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள், வறுமையிலும் பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுக்கும் வழிவகைகள், சிறுவர்களின் போசாக்கு முதல் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சுகாதார திணைக்கள பணிப்பாளர்,இராணுவ பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட உலக உணவு திட்ட பொறுப்பதிகாரி, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், ஏனைய அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம்!
Reviewed by Author
on
November 26, 2022
Rating:
No comments:
Post a Comment