அண்மைய செய்திகள்

recent
-

நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி

அமெரிக்காவில் நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்டைக்குப் பிறகு, குறித்த நபர் தனது துப்பாக்கியை டிரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார் , இதன்போதுபின் இருக்கையில் இருந்த நாய் குதித்து துப்பாக்கியை மிதித்ததால் துப்பாக்கி வெடித்துள்ளது. 

 உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட்ட விபத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்

.
நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி Reviewed by Author on January 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.