அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பறப்பான் கண்டல் கிராமத்தில் 14 வயதுமாணவி தூக்கிட்டு தற்கொலை.

மன்னார் பறப்பான் கண்டல் அடைக்கல மோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை விவயாச நடவடிக்கைகளுக்காகவும்,தாயர் பண்னை ஒன்றில் வேளைக்காகவும் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த போது குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெருமாள் கீர்த்தனா(வயது-14) என்ற மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

பின் பெற்றோர் வீடு வந்த போதே குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

பின் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின் சடலம் மரண விசாரனையின் பின் இன்று சனிக்கிழமை மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பறப்பான் கண்டல் கிராமத்தில் 14 வயதுமாணவி தூக்கிட்டு தற்கொலை. Reviewed by NEWMANNAR on March 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.