அண்மைய செய்திகள்

recent
-

அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான தமிழ் மற்றும் சிங்­கள மொழி வாய் மூலப் பரீட்­சை ஒக்­டோபர் மாதம்

இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் சித்­தி­ய­டைந்து வாய் மூலப் பரீட்­சைக்கு விண்­ணப்­பித்­துள்ள அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பரீட்சை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் மாகாண மட்­டத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக அரச கரும மொழிகள் திணைக்­கள ஆணை­யாளர் அறி­வித்­துள்ளார். 

பொது­நிர்­வாக சுற்­ற­றிக்கை 01/2007இன் பிர­காரம் 2007.01.01ஆம் திகதி அல்­லது அதற்குப் பின்னர் அர­சாங்க சேவையில் ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்ட உத்­தி­யோ­கத்­தர்கள் தமது நிய­மனத் திக­தி­யி­லி­ருந்து 05 வருட காலத்­திற்குள் தமது சேவைக்­கு­ரிய அல்­லது பத­விக்­கு­ரிய அரச கரும மொழிகள் தேர்ச்­சியை பூர்த்தி செய்­தி­ருத்தல் வேண்டும். 

 அரசகரும மொழிகள் திணைக்­க­ளத்­தினால் பரீட்சை நடத்­தப்­ப­டு­வ­தோடு இப்­ப­ரீட்சை எழுத்­துப்­ப­ரீட்சை மற்றும் வாய்­மூலப் பரீட்சை எனும் இரு பகு­தி­களைக் கொண்­ட­மையும். பொது நிர்­வாக சுற்­ற­றிக்கை 01/2014 யின் பிர­காரம் க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் சித்­தி­ய­டைந்த அரச உத்­தி­யோ­கத்­தர்கள் வாய் மூல பரீட்­சைக்குத் தோற்ற முடியும். எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் மாகாண மட்­டத்தில் நடை­பெ­ற­வுள்ள இப்­ப­ரீட்­சைக்கு விண்­ணப்­பங்கள் அண்­மையில் கோரப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்­க­ளத்தின் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யி­ருந்­தது. 

 இலங்கை பரீட்சை திணைக்­க­ளத்தால் நடத்­தப்­படும் க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையில் சிங்­களம் மற்றும் தமிழை இரண்டாம் மொழி­யாகக் கொண்டு சித்­தி­ய­டை­கின்ற உத்­தி­யோ­கத்­தர்கள் அரச கரும மொழிகள் தேர்ச்சிப் பரீட்­சையின் எழுத்துப் பரீட்­சை­யி­லி­ருந்து விடுவிக்கப்படுவதோடு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் வாய்மூல பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான தமிழ் மற்றும் சிங்­கள மொழி வாய் மூலப் பரீட்­சை ஒக்­டோபர் மாதம் Reviewed by NEWMANNAR on September 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.