அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் காணப்­படும் குடிநீர்ப் பிரச்­சி­னைக்கு உட­ன­டித்­தீர்வைப் பெற அமைச்­ச­ரவைப் பத்­திரம்


வடக்கில் நிலத்­தடி நீர் மாச­டை­வதால் ஏற்­பட்­டுள்ள குடிநீர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு உட­னடித் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக புதிய திட்­டங்­களை உள்­ள­டக்­கிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் எதிர்­வரும் மாதம் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நகர அபி­வி­ருத்தி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

யாழ்.நகருக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் தேசிய நீர் வழங்கல் சேவைக்­கான வட­பி­ராந்திய அலு­வ­லகக் கட்­டடத் தொகு­தியை திறந்து வைத்து உரை­யாற்­றுகையிலேயே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

வடக்கில் எழுந்­துள்ள மிகப் பெரும் பிரச்­சி­னை­யாக சுன்­னாகம் நிலத்­தடி நீர் மாச­டையும் விவ­காரம் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் நாம் உட­ன­டி­யாக மாற்றுத் திட்­ட­மொன்றை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. முன்­ன­தாக இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உட்­பட நாம் அனை­வரும் உயர்மட்ட அதி­கா­ரி­க­ளுடன் நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களை இரண்டு தட­வைகள் மேற்­கொண்­டுள்ளோம்.

அதே­நேரம் இரு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக இவ்­வி­டயம் குறித்து அவ­சர நகர்­வொன்றை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென பிர­தமர் தலை­மையில் கூடி ஆராய்ந்து நீர் வழங்கல் அதி­கார சபைக்குப் பணிப்­புரை விடுத்­துள்ளோம்.

குடிநீர் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சவாலை எதிர்­கொள்­வ­தற்­காக உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வரும் நாம் முதற்­கட்­ட­மாக தற்­கா­லிக நீர்த்­தாங்­கிகள் மூலம் இல­வச குடிநீர் வச­தியை வழங்கி வரு­கின்றோம். நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மூல­மாக 2 நீர்த் தாங்­கி­களும் உள்­ளூ­ராட்சி சபைகள் மூலம் 10 நீர்த் தாங்­கி­களும் வழங்­கப்­பட்டு குடிநீர் வழங்கும் செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நிலத்­தடி நீர் எவ்­வாறு மாச­டைந்­தது என ஆராய்ந்தால் அது முடி­வு­றாத சர்ச்­சை­யாக தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆதலால் அவ்­வா­றான ஆராய்­வுக்குள் தொடர்ந்தும் சென்று கொண்­டி­ருக்­காது மாற்று தீர்­வுகள் குறித்து நாம் சிந்­தித்தோம்.

முத­லா­வ­தாக இர­ணை­மடு குளத்­தி­லி­ருந்து குடா­நாட்­டிற்கு நீர் வழங்கும் பாரிய திட்­டத்தை முன்­னெ­டுக்க முயற்­சித்தோம். இதற்கு ஆசிய அபி­வி­ருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அரசின் உதவி ஆகிய கிடைத்­தி­ருந்­தன.

ஏறத்­தாழ 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் தொகையில் இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கா­கவே இன்று இந்த காரி­யா­லயம் நவீன முறையில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. யானை­வரும் பின்னே மணி­யோசை வரும் முன்னே என்­பது போல் கட்­டடம் அமைக்­கப்­பெற்று விட்­டது. ஆனால் செயற்­திட்டம் முன்­னெ­டுப்­பதில் கால­தா­ம­த­மா­கி­விட்­டது.
இர­ணை­மடுத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பதால் விவ­சா­யிகள் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் அச்சம் காணப்­பட்­டது. அதற்­காக இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் பரப்­பையும் 80 ஆயிரம் சதுர அடி­க­ளாக அமையும் வகையில் மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

அத­ன­டிப்­ப­டையில் தற்­போ­துள்ள குளத்தின் கட்­ட­மைப்பை மேலும் 40 ஆயிரம் அடி­களால் அதி­க­ரித்தால் இப்­பி­ரச்­சி­னைக்கு முதற்­கட்ட தீர்வை காணலாம் என்ற நிலையில் நீர்ப்­பா­சன திணைக்­களம் கட்­டு­மா­னங்­களை ஆரம்­பித்­துள்­ளது.

இருப்­பினும் இப்­பி­ரச்­சினை தொடர்ந்தும் சர்ச்­சை­க­ளாக நீடித்து வரும் நிலையில் வட­மா­காண முத­ல­மைச்சர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்­கான உரிய தீர்­வொன்றைப் பெற்றுக் கொடுக்க முன்­வ­ர­வேண்டும். அத்­தீர்வு விவ­சா­யி­களின் நலன்கள் பாதிக்­காத வகையில் அமை­ய­வேண்டும்.

அதே­நேரம் இச் சர்ச்­சைகள் ஒரு­பு­ற­மி­ருக்க ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யிடம் 100 மில்­லியன் டொலர்­களை கடனாகக் கோரி­யுள்ளோம். இதன்­மூலம் கடல் நீரை நன்­னீ­ராக மாற்றும் திட்­ட­மொன்றை யாழ்ப்­பா­ணத்தில் முதன்­மு­த­லாக முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இதற்­காக எதிர்­வரும் மாதம் பாரிய மாநா­டொன்றை நடத்­த­வுள்ளோம்.
இத்­திட்டம் புதி­தாக இருப்­பது ஒரு­பு­ற­மி­ருக்க இதற்­கான நிதித் தேவை அதி­க­மாக உள்­ளது. எனினும் யாழ். மக்­களும் குடிநீர்ப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஜனா­தி­பதி, பிர­தமர் இத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும்.

யாழ். மாந­கர சபைக்கு உட்­பட்ட பகு­தியில் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் அர­சாங்கம் இணைந்து முன்னெடுக்கும் 80 மில்லியன் டொலர் பெறுமதியான கழிவகற்றல் திட்டம் செயற்படுத் தப்படவுள்ளது.

மேலும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை களை விரைந்து எடுப்பதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் எதிர் வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ளது.

இதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசாங்கம் ஒத்துழைப்பை வழங் கும் என்ற நம்பிக்கை எமக்கு உள் ளது என்றார்
வடக்கில் காணப்­படும் குடிநீர்ப் பிரச்­சி­னைக்கு உட­ன­டித்­தீர்வைப் பெற அமைச்­ச­ரவைப் பத்­திரம் Reviewed by Author on June 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.