அண்மைய செய்திகள்

recent
-

அரநாயக்கவில் ஏற்படும் மண்சரிவினால் செஞ்சிலுவைச் சங்க நலன்புரி முகாம் இடமாற்றம்

பாரிய மண்சரிவு ஏற்பட்ட கேகாலை – அரநாயக்க மலையின் சாமசர மலைப்பகுதி சரிவடையும் நிலையில் உள்ளதாக ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் சாமசர மலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாமை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்திருக்கிறது.

இந்த முகாமில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 200 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை அரநாயக்க பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரநாயக்கவில் ஏற்படும் மண்சரிவினால் செஞ்சிலுவைச் சங்க நலன்புரி முகாம் இடமாற்றம் Reviewed by NEWMANNAR on May 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.