அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் ஆறு பேர் கைது

 மன்னாரில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்

ஆறு பேர் கைது 

மன்னார் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய ஒருவரும், 20 முதல் 26 வயதுக்கிடைப்பட்ட ஐந்து பேருமாக மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 வயதுக்கு உட்பட்ட நபர் சிறுவர் சீர்திருத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஐந்து பேர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சின்னக்கடை, எமில் நகர் மற்றும் பனங்கட்டுக்கொட்டு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காதல் என்ற போர்வையில் இந்த துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




மன்னாரில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் ஆறு பேர் கைது Reviewed by Vijithan on January 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.