அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மர முந்திரிகை கூட்டுதாபனத்தில் வேலைவாய்ப்பு.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மன்னார் சிலாவத்துறை கொண்டச்சியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றுவதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
விண்ணப்பம் செய்யும் தொழிலாளர்கள் 18 வயதிலிருத்து 40 வயதிற்கு உற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
பணியாளர்கள் நாளொன்றிற்கு 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதுடன் நாள் வேதனமாக பணியாளர் ஒருவருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் பணிக்கமத்தப்படும் தொழிலாளர்கள் ஊழிய சேமலாப நிதி(EPF)மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு உள்வாங்கப்படுவர்.

முசலி பிரதேச செயலக பிரிவில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அத்துடன் பணிக்கமர்;தப்படும் தொழிலாளர்கள் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் குறிப்பிடப்படும் காலப்பகுதிவரை தொடர்ச்சியாக பணியாற்றி தமது தொழில் தகமைகளை கூட்டுத்தாபனம் திருப்தியடையும் வகையில் நிருபிக்கும் பட்சத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிரந்தர தொழிலாளர்களாக எதிர் காலத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் 13.03.2017 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஜீனைது முகம்மது றிஸ்வி 0767317796, ஏ.சமீயூ முகம்மது பஸ்மி 0777238659, பெணான்டஸ் கூஞ்ஞா 0715994092 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மன்னார் நிருபர்-
(8-03-2017)


இலங்கை மர முந்திரிகை கூட்டுதாபனத்தில் வேலைவாய்ப்பு. Reviewed by NEWMANNAR on March 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.