அண்மைய செய்திகள்

recent
-

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

லாபுகல தேசிய பூங்காவில் தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் ஆருகம்பே விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேநகபர்களில் 6 பேர் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் ஏனைய இருவரும் அம்பலாந்தோட்டை மற்றும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். 

 லாபுகல தேசிய பூங்காவில் நுழைந்து, இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சுந்தேகநபர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது Reviewed by Author on January 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.