அண்மைய செய்திகள்

recent
-

முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்கமைய தரம் 02 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் நாளை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா கூறியுள்ளார்.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம் Reviewed by Author on January 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.