சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்…!
இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இன்று (புதன்கிழமை) முதல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 11 ஆம் திகதி, 02 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை தரம் 1 மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் வாரத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தரம் 11 ற்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்…!
Reviewed by Author
on
January 06, 2021
Rating:

No comments:
Post a Comment