அண்மைய செய்திகள்

recent
-

குளத்தை அழித்தால் பசுவைக் கொன்ற பாவம் வரும்: 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தகவல்

'தானமாக வழங்கப்படும் குளத்தை அழிப்பவருக்கு, பசுவைக் கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பட்டமங்கலம் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது. 

 முற்காலத்தில் குளம் வெட்டித் தருமம் செய்வதை ஒரு மனிதனின் முக்கியக் கடமையாகக் கருதினர். இதனால் தனி நபர்கள் பலர் குளங்களை வெட்டிக் கொடுத்தனர். அவ்வாறு 373 ஆண்டுகளுக்கு முன் துகவூருடையான் என்பவர் ஒரு குளம் வெட்டி அதற்கு “உடையான் நாயன்” என பெயரிட்டு, தருமமாகக் கொடுத்த தகவலைச் சொல்லும் பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பட்டமங்கலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குளத்தை அழித்தால் பசுவைக் கொன்ற பாவம் வரும்: 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தகவல் Reviewed by Author on April 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.