நியூசிலாந்து சட்டங்கள் காரணமாக தாக்குதலை மேற்கொண்ட இலங்கை பிரஜை குறித்த தகவலை வெளியிட முடியாத நிலை- நியுசிலாந்து அதிகாரிகள்
வெள்ளிக்கிழமை வரை அவர் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.அந்த நபரின் முக்கிய நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தபோதிலும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது?
நீங்கள் ஒருவரை ஏழுநாட்கள் 24 மணித்தியாலங்கள் கண்காணிக்கின்றீர்கள் என்றால், அவருக்கு அருகில் எப்போதும் நாங்கள் இருக்க முடியும் என்று அர்த்தமல்ல என பொலிஸ் ஆணையாளர் அன்றூ கோஸ்டர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் இன்று தங்களால் எவ்வளவு வேகமாக தலையிட முடியுமோ அவ்வளவு வேகமாக தலையிட்டனர் மிகவும் பயங்கரமான நிலையில் அவர்கள் மேலும் காயங்களை தவிர்த்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தான் கண்காணிப்டுவதை நன்கு அறிந்திருந்தார் அதனை தெரிந்தவராயிருந்தார் அதனால் அவரிடமிருந்து சற்று தொலைவிலிருந்தே அவரை கண்காணிக்கவேண்டிய நிலையில் பாதுகாப்பு தரப்பினர் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர் தனித்தே செயற்பட்டார் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சட்டங்கள் காரணமாக தாக்குதலை மேற்கொண்ட இலங்கை பிரஜை குறித்த தகவலை வெளியிட முடியாத நிலை- நியுசிலாந்து அதிகாரிகள்
Reviewed by Author
on
September 03, 2021
Rating:

No comments:
Post a Comment