அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி பரந்தனில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை

கிளிநொச்சி, பரந்தன், சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றிற்குள் வெட்டுக்கயங்களுடன் ஒரு பிள்ளையின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு இன்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனவும் இவர் குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாகவும் அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





கிளிநொச்சி பரந்தனில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.