நாடு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; பண்டிகைக் காலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவும்: உபுல் ரோஹண
நாம் ஒரு பெரிய பேரழிவை நோக்கிச் செல்கிறோம். சமூகத்தின் பல பகுதிகளில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து இதை கற்பனை செய்து பார்க்க வேண்டாம். தரையிலுள்ள பெரும்பாலான சூழ்நிலைகள் ஆபத்தானவை. நோயாளிகள் அதிகளவில் பதிவாகி வருகின்றனர்.
எனவே தேவையற்ற பொதுக் கூட்டங்களை வைத்து சுகாதார அறிவுறுத்தலை மீறி இவ்விதம் பண்டிகைகளைக் கொண்டாட முனைந்தால் 2022ல் இந்தப் பேரழிவு சூழ்நிலையில் பாதி விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்து கிறேன்.
எனவே, பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பண்டிகைகளைக் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லையேல் நமக்கு நெருக்கமானவர்களை இழந்து விடுவோம்.
இல்லாவிட்டால், பண்டிகைக் காலத்தை தனிமைப்ப டுத்தல் மையங்களிலும், சிகிச்சை மையங்களிலும் கழிக்க நேரிடும் என்பதை வலியுறுத்துகிறோம்.
எதிர்காலத்தில் சுகாதார சட்டத்தை மீறி பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் அவ்வாறான இடங்களுக்குள் பிரவேசித்து சுகாதார சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
நாடு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; பண்டிகைக் காலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவும்: உபுல் ரோஹண
Reviewed by Author
on
December 07, 2021
Rating:
No comments:
Post a Comment