ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!
உயிரிழந்த எகிப்திய பிரஜை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கை வந்து எல்ல புகையிரத நிலையம் வரை உடரட்ட ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று மதியம் இவ்வாறு தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டவர் மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெளிநாட்டு பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment