மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மன்னாரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
-குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை(29) மாவட்ட ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு,மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ரீதியாக விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து,அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கூற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்.
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment