வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிப்பு
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2 தொடக்கம் 3 மீட்டர் வரை கடல் அலைகள் மேல் எழலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிப்பு
Reviewed by Author
on
November 18, 2022
Rating:

No comments:
Post a Comment