அண்மைய செய்திகள்

recent
-

மூன்று இடங்களில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 10.6 மில்லியன் ரூபா கொள்ளை

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராப்பிட்டியவில் அரச வங்கிக் கிளைகளில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 1,06,50,000 ரூபாவிற்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வௌிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் நேற்று அதிகாலை குறித்த ATM இயந்திரங்களின் கணினி கட்டமைப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, செயலியின் தரவுகளை மாற்றியமைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

 மூன்று நகரங்களிலும் ஒரே மாதிரியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களே திருட்டில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸார் கூறினர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு ஹிக்கடுவ மற்றும் காலி, பத்தேகம ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன


.
மூன்று இடங்களில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 10.6 மில்லியன் ரூபா கொள்ளை Reviewed by Author on December 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.