பணத்திற்காக ஒன்றரை வயது சிறுமியை சித்திரவதை செய்த தந்தை கைது
எனினும், அவர் சிறுமியை தடி மற்றும் கைகளால் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்து வௌிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி, அவ்வப்போது பணம் கேட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிறுமியின் தாய், தனது தாயாரான சிறுமியின் பாட்டிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, பக்கமுன பொலிஸார் தந்தையை நேற்று (09) கைது செய்துள்ளனர்.
30 வயதான குறித்த நபர் இன்று ஹிங்குராகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணத்திற்காக ஒன்றரை வயது சிறுமியை சித்திரவதை செய்த தந்தை கைது
Reviewed by Author
on
March 10, 2023
Rating:
Reviewed by Author
on
March 10, 2023
Rating:


No comments:
Post a Comment