கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா
கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று (25) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்துவைத்தார்.
இதில் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா
Reviewed by Author
on
July 26, 2024
Rating:

No comments:
Post a Comment