அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பிரபல ஆலயத்தில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்!

  வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது.


இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(24) இடம்பெற்றது.




திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.




இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில் 1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 3 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.


குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த ஆலய திருவிழாவின் போது, மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக குறித்த பெண் ஆலயத்தில்மாம்பழத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.






வவுனியாவில் பிரபல ஆலயத்தில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்! Reviewed by Vijithan on August 24, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.