அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளர்கள் பதிவு: 62 பேர் பலி!

 வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது. 


தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த ஆண்டில் இதுவரை இல்லாதவாறு அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆக பதிவாகியுள்ளது. 

இதனிடையே, ஓகஸ்ட் மாதத்தில் கடந்துசென்ற இரு நாட்களில் 646 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 18,249 ஆகும். 

இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,048 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறாக நோயாளர்கள் பதிவாகிவரும் பின்னணியில், டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆகப் பதிவாகியுள்ளதுடன், 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகத் தொடர்ந்து காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.



-

நாட்டில் இதுவரை 86,000 டெங்கு நோயாளர்கள் பதிவு: 62 பேர் பலி! Reviewed by Vijithan on August 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.