அண்மைய செய்திகள்

recent
-

பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

 சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் வழமை போன்று பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தற்போது அனைத்துக் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.





பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு Reviewed by Vijithan on August 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.