அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை சிறுநாவற்குளம் பிரதான வீதியின் அவல நிலை-மக்கள் விசனம்.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறுநாவற்குளம் சந்தியில் இருந்து வங்காலை கிராமத்திற்குச் செல்லும் வீதி புதிதாக அமைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிய நிலையில் குறித்த வீதி கடுமையாக பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக வங்காலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

 சுமார் 300 மீற்றர் வரை அமைக்கப்பட்டுள்ள குறித்த வீதியில் பல பகுதிகளில் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. குறித்த வீதி எந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.ஒப்பந்த தொகை எவ்வளவு என்ற எவ்வித அறிவித்தல்களும் போடப்படவில்லை.

 குறித்த வீதியில் செம்மண் பரவப்பட்டு அதற்கு மேல் சிறிய கொங்கிரீட் கற்கள் போடப்பட்டு உரிய முறையில் செப்பனிடப்படாமல் தார் உற்றப்பட்டு குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

 தற்போது மன்னாரில் இருந்து வங்காலை,நானாட்டான்,முசலி,சிலாபத்துறைபோன்ற கிராமங்களுக்கானஅரச,தனியார் போக்குவரத்துச் சேவைகளும் குறித்த வீதியூடாக இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த வீதி அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,

 குறித்த வீதி (ஆர்.டி.டி) வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீதி ஒப்பந்தத்தினை சி.ஈ.சி என்ற தனியார் அமைப்பு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.





வங்காலை சிறுநாவற்குளம் பிரதான வீதியின் அவல நிலை-மக்கள் விசனம். Reviewed by NEWMANNAR on April 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.