அண்மைய செய்திகள்

recent
-

யாழில் டக்ளஸ் தேவானந்தா இயக்கி வந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைப்பு!...


யாழ்.குடாநாட்டில் சட்டரீதியான ஆவணங்கள் எவையுமில்லாமல் இயங்கிவந்த அரசியல் கட்சி ஒன்றுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கு பொலிஸாரின் உதவியுடன் தகவல் தொடர்பாடல் அமைச்சும், TRCயும் இணைந்து சீல் வைத்துள்ளதுடன் நிலையத்தில் பணியாற்றிய சிங்களவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இயக்கி வந்த நிலையமே சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக சொல்லப்படாத போதும் சட்டரீதியான ஆவணங்கள் இல்லாமலேயே சீல் வைக்கப்பட்டமைக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

மேலும் தொலைக்காட்சி நிலையித்தில் இருந்த பொருட்களை யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரும் யாழ். பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொலைக்காட்சி தேர்தல் காலத்தில் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக முறைப்பாடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் டக்ளஸ் தேவானந்தா இயக்கி வந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைப்பு!... Reviewed by Author on October 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.