வடமாகாண ஆளுனர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்.(படம் இணைப்பு)
மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார( (H.M.G.S.Palihakkara) தலைமையில் இன்று(23) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்தின் மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக வீதி,சுகாதாரம்,விவசாயம்,கல்வி போன்ற விடையங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.
இதன் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டதோடு குறித்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண ஆளுனரினால் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டது.
அத்தோடு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகம் சார்பாக ; வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார((H.M.G.S.Palihakkara) அவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ் உயரதிகாரி,திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தின் மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக வீதி,சுகாதாரம்,விவசாயம்,கல்வி போன்ற விடையங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.
இதன் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டதோடு குறித்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண ஆளுனரினால் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டது.
அத்தோடு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகம் சார்பாக ; வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார((H.M.G.S.Palihakkara) அவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ் உயரதிகாரி,திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாண ஆளுனர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்.(படம் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
November 23, 2015
Rating:
No comments:
Post a Comment