அண்மைய செய்திகள்

recent
-

கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல்: தூக்கி நிறுத்தம்


தென்கொரியாவில் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி மாணவ, மாணவிகள் பலர் உல்லாசப்பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று கப்பல் ஜிண்டோ தீவில் உள்ள கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தைகள் உட்பட சுமார் 304 பேர் உயிரிழந்தனர். அந்த கப்பல் விப்பத்துக்குள்ளான நிலையிலே கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. இதன் எடை 6 ஆயிரத்து 825 டன்.


கடலுக்குள் மூழ்கிய இந்த கப்பலை தூக்கி நிறுத்தி மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அதற்கான நடவடிக்கையை அந்த நாட்டு அரசு மேற்கொண்டது.

அதன் விளைவாக கடுமையான முயற்சிக்குப்பின்னர் அந்த கப்பல் இப்போது கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டு விட்டது.

இதில் நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கப்பல் இன்னும் 2 வாரங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல்: தூக்கி நிறுத்தம் Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.