அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் படகொன்றில் வந்து இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட நாகபட்டினம்  பகுதியை சேர்ந்த 8 இந்திய மீனவர்களே ரோந்து நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இந்திய மீனவர் ஒருவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான முறையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றத்தில் கைதுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.